தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குரூப் பி, சி பிரிவில் விண்ணப்பிக்க 25ம் தேதி தஞ்சையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஜூன் 24: ஸ்டாப் செலக்சன் கமிஷனானது தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர நிலை தேர்வு வாயிலாக ஒன்றிய அரசில் குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பிரிவில் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி போன்ற பணி காலியிடங்கள் உட்பட 14582 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பை < https://ssc.nic.in/ > என்ற இணையதளத்தில் எழுத்துத்தேர்வு வாயிலாக நிரப்ப வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியுடைய இளைஞர்கள் 04.07.2025 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். கணினி வழியாக முதல் கட்ட தேர்வானது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு குறித்த முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.

எனவே, மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்காக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வருகின்ற 25.06.2025 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் 04362 237037 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வதோடு, கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News