தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திண்டுக்கல்லில் கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று குறைதீர்ப்பு கூட்டம்

 

திண்டுக்கல், ஜூலை 11: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை பணியாளர்களுக்கான பணியாளர் நாள் இன்று நடைபெற உள்ளது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை பணியாளர் நாள் (குறைதீர்ப்பு) நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திண்டுக்கல் மண்டல பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தி, உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் பொருட்டும், பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்து அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்திடும் வகையிலும் மண்டல அளவில் பணியாளர் நாள் இன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆகியோரின் தலைமையில் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.