தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் அனைத்து நீர் நிலைகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டம்

Advertisement

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் நேற்று பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் மதுராந்தகம் விவசாய பாசன ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பசுமை தாயகம் மாவட்ட தலைவர் ஓட்டகோயில் சுரேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், சாந்த மூர்த்தி, குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு விதிகளை நடை முறைப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அனைத்து கிராம புறங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதையும் தமிழக அரசு கண்டறிந்து குப்பைகளை அகற்றி நீர்நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி உரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கோபால கண்ணன், லட்சுமி ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா சுரேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement