தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம் அருகே பேருந்து தகரம் உரசியதில் பாட்டி, பேரன் படுகாயம்: பஸ்சை சிறைபிடித்து சாலைமறியல்

 

Advertisement

மதுராந்தகம், பிப். 5: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மருவளம் பகுதியில் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி நேற்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மருவளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டியான ராஜேஸ்வரி மற்றும் அவரது பேரன் சச்சின் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை சச்சின் ஓட்டிச் சென்றுள்ளார்.

எதிரில் திருப்பத்தில் பேருந்து சென்றபோது ஓட்டுநர் பக்கம் தகடு ஒன்று சேதமடைந்து தொங்கிய நிலையில் இருந்துள்ளது. அந்த தகடு மூதாட்டி ராஜேஸ்வரி மற்றும் சச்சின் உடம்பில் உரசியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், பேருந்து பராமரிக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த சித்தாமூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News