தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை அழுகிய நிலையில் சடலம் மீட்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை ஜூலை 1: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் ரம்யா சுகந்தி(44). எம்பிஏ பட்டதாரி. இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேரன் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து ரம்யா சுகந்தி கடந்த ஆறு மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ஐடி நிறுவனத்தில் வீட்டிலிருந்துபடியே பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், அவர் தங்கி இருந்த வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. வீடும் உள் பக்கம் பூட்டி இருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்துச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் ரம்யா சுகந்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்து நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, ரம்யா சுகந்தியின் உறவினரான சென்னையில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement