தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பள்ளி மாணவர்கள் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் களப்பயணம்

 

திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார்பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ளது நஞ்சராயன் பறவைகள் சரணாலயம். இங்கு, உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு பறவைகளும் வலசை வரும். இந்த சரணாலயத்தில் திருப்பூரை சேர்ந்த பிச்சம்பாளையம், கருப்ப கவுண்டம்பாளையம் மற்றும் பத்மாவதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமை படை மாணவர்கள் நேற்று களப்பயணம் மேற்கொண்டனர்.

தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் இந்த களப்பயணம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திருப்பூர் வனச்சரக அதிகாரி நித்யா மற்றும் திருப்பூர் இயற்கை கழகத்தை சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, களப்பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு பறவைகளின் முக்கியத்துவம் மற்றும் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் பறவைகளின் வகைகள், அவற்றை எவ்வாறு கண்டறிவது, பறவைகளின் வாழ்விடத்தின் தன்மை மற்றும் பறவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. தொடர்ந்து பறவைகளின் படங்கள் காண்பிக்கப்பட்டு பறவைகளின் பெயர்கள் மற்றும் வகைகள் குறித்து பாடம் எடுக்கப்பட்டது. இதில், வனத்துறை அலுவலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News