தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது

 

Advertisement

தஞ்சாவூர், செப். 14: தஞ்சாவூர் அருகே சாலையில் ஆட்டோ குறுக்கே சென்றதால் அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. தஞ்சாவூர் பூண்டி மாதா கோயிலில் இருந்து அரசு பஸ் ஒன்று 50 பயணிகளை ஏற்றி கொண்டு வேளாங்கண்ணி நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உடையார் கோவில் பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆட்டோ ஒன்று சாலையின் குறுக்கே சென்றுள்ளது. இதனால் ஆட்டோவில் மோதாமல் இருப்பதற்காக பஸ்சை, டிரைவர் திருப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அரசு பஸ் சாலை ஓரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா (28), வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சினேகா (21) ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். டிரைவர் சுதாரித்து பஸ்சை ஓட்டியதால் பெரிய அளவில் விபத்து இன்றி பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News