தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசு பேருந்து ஓட்டுநர் கீழே விழுந்து படுகாயம்

அம்பத்தூர்: நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசுப் பேருந்து ஓட்டுநர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(52), அரசுப் பேருந்து ஓட்டுநர். இந்நிலையில், மாணிக்கம் நேற்று மதுரையில் இருந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்தை நிறுத்திவிட்டு மாணிக்கம் ஓய்வு அறைக்கு சென்றார். அப்போது முதல் மாடிக்கு அருகே உள்ள நாவல் மரத்தில் அதிகளவில் நாவல்பழம் இருப்பதைக் கண்டார். அப்போது, கட்டிடத்தின் மேலே ஏறி நாவல் பழத்தை பறித்துக் கொண்டிருந்தபோது, மாணிக்கம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

Advertisement

அதில், மாணிக்கம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அலறிக்கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த ஊழியர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணிக்கத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணிக்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement