தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் அருகே மினி வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து

திண்டிவனம், ஜூன் 3: திண்டிவனம் அருகே மினி வேன் மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெண்மணியாத்தூரில் இருந்து கொள்ளார் கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் நேற்று மினி வேனில் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் சிப்காட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது வெண்மணியாத்தூரில் இருந்து வந்த மினி வேன் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் மினி வேன் கடுமையான சேதம் அடைந்தது.

Advertisement

மேலும் இந்த விபத்தில் மினி வேன் மீது மோதிய அரசு பேருந்து அருகே இருந்த சிறிய பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சத்யராஜ் மகன் சந்திரன்(42), மூதா என்பவரின் மகன் யுகதேவ்(20), மனோகரன் மகன் பார்த்திபன்(33), கோவிந்தசாமி மனைவி அமுதா (55) ஆகிய நான்கு பேரும், அரசு பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த ரோசனை போலீசார் காயமடைந்தவர்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரி செய்தனர்.

Advertisement

Related News