தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிப்பாளையம் மேம்பால பணிகள் வணிக கட்டிடம் இடித்து அகற்றம்

 

Advertisement

மதுரை, ஜூன் 23: தமிழக நெடுஞ்சாலைத்துறையின் மதுரை கோட்டப்பிரிவின் கீழ் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.190.40 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, 10,980 ச.மீட்டர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலையில், பிரதான சாலை சந்திப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் கடந்த, 19ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அமெரிக்கன் கல்லூரி அருகில் செயல்பட்டு வந்த வணிக வளாக கட்டிடத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான துணிக்கடையை அகற்றும் பணிகளும் நெடுஞ்சாலைத்துறையின் தெற்கு உதவி கோட்ட பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் வெங்கடேஷ்பாபு தலைமையில், நேற்று முன்தினம் துவங்கின.

அதேநேரம், அமெரிக்கன் கல்லூரியின் நுழைவாயிலை ஒட்டிய சில பகுதிகளை அகற்றுவது தொடர்பாக நில ஆர்ஜித பணிகள் மாநில வருவாய் நிர்வாக ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தபின் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்குமெனவும், அவை முடிந்த பின்பே கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கான மேல்தளம் அமைக்கும் பணிகள் நடைபெறும் எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News