தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹11 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை திருவிழாக்கள் எதிரொலியால் விலை உயர்வு ஒடுகத்தூர் வாரச்சந்தையில்

ஒடுகத்தூர், மே 18: ஒடுகத்தூரில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகளின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. மேலும், வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் ₹11 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் வாரந்தோறும் ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதே நேரத்தில் திருவிழா நாட்களில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பதும், புரட்டாசி மாதங்களில் சில லட்சங்களுக்கு மட்டுமே விற்பனை நடப்பதும் வழக்கம்.

Advertisement

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை ஆட்டுச்சந்தை கூடியது. ஆடுகள் வரத்து 2, 3 வாரமாக குறைவாகவே இருந்தது. ஆனால், நேற்று ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது, பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் நேர்த்திக்கடனுக்காகவும், வேண்டுதலுக்காகவும், சுவாமிக்கு பலியிடவும் ஆடுகளை வாங்க காலை முதலே சந்தையில் கூட்டம் களைகட்டியது. இதன் காரணமாக வியாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு ஜோடி ஆட்டின் விலை கிடுகிடு என்று உயர்ந்து ₹25 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த இரண்டு வாரமாகவே ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக ஆடுகள் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், திருவிழாக்கள் தொடங்கியுள்ளதால் ஆடுகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகளும் ஆடுகளை விற்று நல்ல லாபம் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஒரே நாளில் மட்டும் ₹11 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.

Advertisement

Related News