தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் அருகே காதலன் ஏமாற்றியதாக கூறி காவல் நிலையம் முன் காதலி தர்ணா

 

Advertisement

விழுப்புரம், மே 28: காதலன் ஏமாற்றியதாக கூறி போலீஸ் நிலையம் முன் அமர்ந்து காதலி தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகள் அக்சிலியா ஜெயசீலி (34). இவர் நேற்று மாலை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.

போராட்டத்துக்கான காரணம் குறித்து அப்பெண் கூறுகையில், நானும், தெளி கிராமத்தை சேர்ந்த அன்ட்ரோ ஜெயகுமார் (30) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்தோம். அதுவும், இவர் அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது என்னுடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து காதலித்தோம். அப்போது, அவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னோடு பலமுறை நெருங்கி பழகினார்.

இந்நிலையில், அவர், கடந்த ஒரு மாதமாக என்னிடம் சரியாக பேசாததை கண்டு சந்தேகமடைந்து நான் விசாரித்தபோது, அவரது பெற்றோர் வேறொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நான் அவரிடம் சென்று கேட்டபோது, திருமணம் செய்ய முடியாது என கூறி என்னை மிரட்டி அனுப்பினார்.

தொடர்ந்து, நான் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அன்ட்ரோ ஜெயக்குமார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் தர்ணா செய்ததாக தெரிவித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அப்பெண் போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement