தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் திருமணம் செய்த சிறுமி 4 மாத கர்ப்பம் புதுமாப்பிள்ளை மீது போக்சோ வழக்கு

வேலூர், ஜூலை 2: காட்பாடி அருகே சிறுமியை காதல் திருமணம் செய்து 4 மாத கர்ப்பிணியாக்கிய புதுமாப்பிள்ளை மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் விக்ரம்(25), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையறிந்த அவர்களது பெற்றோர் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

Advertisement

இந்நிலையில் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக விக்ரம், மனைவியை அழைத்துச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதை எட்டாமல் சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமியை திருமணம் செய்த விக்ரம் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News