தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொட்டியம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

முசிறி, நவ.10: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை பகுதியில் தனியார் பள்ளி குழந்தைகள் காப்பக இல்லத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் தெற்கு சித்தாம்பூரை சேர்ந்த முருசாமி மகள் ஹரிணி (15). இவரது சகோதரி திவ்யா(16). இருவரும் தொட்டியம் அருகே திருஈங்கோய்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கி பயின்று வந்தனர்.

Advertisement

இந்நிலையில் சனிக்கிழமை பள்ளிக்கு சென்று விடுதிக்கு வந்த ஹரிணி உடைகளை மாற்றுவதற்காக விடுதியின் அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அவரது சகோதரி திவ்யா உடை மாற்றும் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது ஹரினி விடுதியில் உள்ள மேற்கூரை கம்பியில் துப்பட்டாவில் தூக்கிலிட்ட நிலையில் இருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.

இதையடுத்து விடுதியில் உள்ள மாணவிகள் பார்த்து விடுதி காப்பாளர்ளிடம் தெரிவித்தனர். விடுதி காப்பாளர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இத்தகவலறிந்த தொட்டியம் போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News