தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெனரேட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர் செய்யாறு எல்ஐசி அலுவலகத்தில்

செய்யாறு, செப். 14: செய்யாறு எல்ஐசி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆற்காடு சாலையில் எம்எல்ஏ அலுவலகம் அருகில் எல்ஐசி அலுவலகம், தனியார் வங்கி, தேசிய மயமாக்கப்பட்டு வங்கி அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணி அளவில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எல்ஐசி அலுவலகத்தில் கீழ் தளத்தில் உள்ள 25 கிலோ வாட் ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. அப்போது அதில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்புத் துறை அலுவலர் (பொறுப்பு) மணி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் 10 நிமிடத்தில் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விரைந்து வந்த தீயை அணைத்த தீயணைப்புத் துறை வீரர்களின் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

Advertisement