தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணமேல்குடி பஸ் ஸ்டாண்டு அருகே குவிந்து கிடக்கும் குப்பை, மருந்து கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

 

Advertisement

அறந்தாங்கி, ஜூலை 20: மணமேல்குடி பஸ் ஸ்டாண்டு மருந்து கழிவு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. அதில் கால்நடை செத்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து அப்புறபடுத்த வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பஸ் ஸ்டாண்டில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைத்து குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். கோழி இறைச்சி, மருந்து கழிவு உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் பஸ் ஸ்டாண்டில் கொட்டுவதால் இந்த கழிவுகளை நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்று வருகிறது. அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அள்ளி செல்கின்றனர். குப்பை கொட்டுவதற்கு என்று தனி இடம் அமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லாததால் இங்கு அனைத்து குப்பைகளும் கொட்டப்பட்டு குப்பை மேடாக உள்ளது.

இந்த மருந்து கழிவு, இறைச்சி கழிவுகளை சாப்பிடும் கால்நடைகள் செத்து கிடக்கிறது. இதனால் பஸ் ஸ்டாண்டு பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மணமேல்குடி பஸ் ஸ்டாண்டில் செத்து கிடக்கும் மாடு, கொட்டப்பட்டு உள்ள அனைத்து குப்பைகளையும் உடனே அப்புறபடுத்தி. இனிவரும் நாட்களில் யாரும் பஸ் ஸ்டாண்டில் இறைச்சி கழிவு, மருந்து கழிவுகளை கொட்டாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News