தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோட்டுச்சேரி அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மழைகோட்

 

Advertisement

காரைக்கால், ஜூலை 25: கோட்டுச்சேரி விஓசி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மழைக்கோட்டுகளை எம்எல்எ சந்திரபிரியங்கா வழங்கினார்.காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் அமைந்துள்ள வி. ஒ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுவை அரசால் இலவசமாக வழங்கப்படும் மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 42 மாணவர்களுக்கு மழை கோட் வழங்கினார். பின்னர் எம்எல்ஏ பேசும்போது, புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்பை விட கூடுதல் கவனம் செலுத்தி நீங்கள் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை இலவசமாக அளித்து வருகிறார். லேப்டாப், மழைகோட்,சீருடைகள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியி்ல் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News