தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்கள், விதவைகள், ஆதரவற்றோருக்கு இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம்

 

Advertisement

திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் எம்பிராய்டரி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்கு திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் 20 முதல் 40 வயது வரை உடைய மகளிர்கள், வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப ஆண்டு வருமானம் சான்று ரூ.72 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். வயதுக்கான பள்ளி சான்று, எம்பிராய்டரி தையல் பயிற்சி பெற்ற சான்று, முன்னுரிமை பெறுவதற்கு, விதவைச்சான்று (அல்லது) ஆதரவற்றோர் சான்று (அல்லது) கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று ஆகியவைகளுடன் வரும் 31ம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர்  சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News