தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகம் விநியோகம்

கோவை, ஜூலை 3: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் 17 மேல்நிலை பள்ளிகள், 11 உயர்நிலை பள்ளிகள், 37 நடுநிலை பள்ளிகள் 83, ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025-26ம் கல்வி ஆண்டில், மாநகராட்சி பள்ளிகளில் 51 ஆரம்ப பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 59 பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்திற்கு ஒன்று வீதமாக மூன்று புத்தகங்களும், மாணவர்கள் செயல்பாடுகள் செய்வதற்கான மூன்று செயல்பாட்டு புத்தகங்கள் வழங்கம் விழா கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 75வது வார்டுக்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் கோவை தொகுதி எம்.பி., கணபதி ராஜ்குமார் இப்புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, உதவி கமிஷனர் துரைமுருகன், மாநகராட்சி கல்வி அலுவலர் சி.தாம்சன், மண்டல சுகாதார அலுவலர் வீரன், மாநகராட்சி கல்வி பிரிவு அலுவலர்கள் சிவசாமி, பூங்கொடி, சுகாதார ஆய்வாளர் சலைத், கவுன்சிலர் அங்குலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.