தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்குசந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.8.37 லட்சம் மோசடி

 

Advertisement

புதுச்சேரி, ஜூன் 25: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் தனது வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளார். பின்னர் அவர், பங்குசந்தை முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பியவர், ரூ.8.37 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீட்டிற்கான லாப தொகையை அவரால் எடுக்க முடியவில்லை. முதலீடு தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. அதன்பிறகே, தான் மோசடி நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக புகார் செய்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம், தனியார் நிதிநிறுவன கடன் அதிகாரி போல் அறிமுகம் இல்லாத நபர் பேசி, குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாக கூறியுள்ளார். அதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.16,499 அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண், மேற்கண்ட தொகையை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி கடன் தரவில்லை. மாறாக, மேலும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதன்பிறகே தான், ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்தார். இதேபோன்று, புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த ஆண் நபர், தனியார் ஏசி கம்பெனி கஸ்டமர் கேர் நம்பரை தேடியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்ட நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் ஏபிகே பைல் அனுப்பியுள்ளார். அதன் மூலமாக தனது சுயவிவரங்களை பதிவிட்டபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.791 திடீரென மாயமாகி விட்டது. மேற்கண்ட புகார்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement