தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் அருகே கிழம்பியில் உள்ள திருமலை கல்லூரி பட்டமளிப்பு விழா: முன்னாள் டிஜிபி பங்கேற்பு

 

Advertisement

காஞ்சிபுரம், மே 25: காஞ்சிபுரம் அருகே கிழம்பி கிராமத்தில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரி நடைபெற்ற 20வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். கீழம்பி கிராமத்தில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது, மாணவ - மாணவிகள் பட்டங்களை பெற்று வீட்டுக்கும், நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் நீங்கள் பாடுபட வேண்டும், வெற்றிகளை பெற உழைத்து முன்னேற வேண்டும். இந்த பட்டங்களை பெற காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் நீங்கள் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News