தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மான் கறி சமைத்த 3 பேருக்கு அபராதம் வனத்துறை நடவடிக்கை தண்டராம்பட்டு அருகே

 

தண்டராம்பட்டு, ஜூன் 30: தண்டராம்பட்டு அருகே மான் கறி சமைத்த 3 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் தண்ணீர்பந்தல் பகுதியில் சிலர் மானை வேட்டையாடி சமைத்து கொண்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் அணை வன அலுவலர் ரவி, வனவர் குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில், தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை கொன்று மாட்டுக்கொட்டகையில் வைத்து சமைத்து கொண்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், மானை வேட்டையாடி சமைத்து கொண்டிருந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த மோகன்(40), விஜய்(25), கண்ணன்(56) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், மான் கறியை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் சாத்தனூர் அணை வன அலுவலகத்திற்கு அழைத்து சென்று தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், மான் வேட்டையாடியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related News