தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எத்திலீன் பயன்படுத்தி பழுக்க வைத்த 1டன் மாம்பழம் அழிப்பு உணவுபாதுகாப்புத்துறை நடவடிக்ைக வேலூர் மாங்காய் மண்டியில்

வேலூர், ஜூன் 5: வேலூர் மாங்காய் மண்டியில் எத்திலீன் பயன்படுத்தி பழுக்க வைத்த 1டன் மாம்பழம் அழித்து உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்கள் உள்ளதா? என்று கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்ய மாவட்ட உணவுபாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாவட்டம் உணவுபாதுகாப்பு நியமனஅலுவலர் கைஷே்குமார் தலைமையில்(பொறுப்பு) உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ், மாநகர நலஅலுவலர் பிரதாப், சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மாங்காய் மண்டியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது எத்திலீன் எனப்படும் ரசாயனத்தை நேரடியாக மாம்பழங்களில் வைத்து பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த கடைகளில் சோதனை செய்ததில், 3 கடைகளில் இதுபோன்று விதிமுறைகளை மீறி, எத்திலீன் ராசயனம் நேரடியாக பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைத்தது தெரியவந்தது. இதனை உண்பதால் தீராத வயிற்று போக்கு, உடல்உபாதை போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகநேரிடுகிறது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த சுமார் 1டன் மாம்பழங்கள் மாநகராட்சி மூலம் பெனாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் விதிமுறைகள் மீறி பழங்கள் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுபாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement