தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீவன பற்றாக்குறை எதிரொலி; மாட்டுச்சந்தையில் வரத்து குறைந்து விற்பனை மந்தம்

வேலூர், ஏப்.9: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கால்நடை தீவன பற்றாக்குறை என்பதால் மாடுகளின் வரத்து பொய்கை மாட்டுச்சந்தையில் குறைந்ததால், விற்பனையும் மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் வேலூர் அடுத்த பொய்கையில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

Advertisement

குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், காளைகள், எருமைகள், கோழிகள், ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றுடன் ஆடுகள், கோழிகள் உட்பட பிற கால்நடைகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

வழக்கம்போல் நேற்றும் மாட்டுச்சந்தை கூடியது. ஆனால் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 500 முதல் 650 வரையிலான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. கோடைக்காலம் என்பதால் தற்போது தீவனப்பற்றாக்குறை நிலவுவதால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் மாடுகளை வாங்குவதற்கு தயக்கம் காணப்பட்டது. இதனால் விற்பனையும் ரூ.20 லட்சத்துக்கே நடந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலமான தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வரும் காலங்களில் தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையும் சரிவு கண்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement