தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பு பணி மும்முரம்

கந்தர்வகோட்டை, ஏப்.11:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள மக்களின் பிரதான தொழிலான விவசாயம், கால்நாடைகளான ஆடுகள், மாடுகள் வளர்பது தான். விவசாயம் இல்லாத நேரங்களில் மற்ற வேலைக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். கால்நடை வளர்ப்பவர்கள் சம்பா நெல் அறுவடையில் வைக்கோல் வாங்கி கால்நடைகளுக்கு சேகரித்து வைத்திருந்தனர். அது விலை கூடுதலாக இருப்பதால் தற்சமயம் கடலைக் கொடிகள் வாங்கி சேகரித்து வருகிறார்கள்.

Advertisement

கடலை கொடி ஒரு வண்டி ரூ. 6000 எனவும், வாகன செலவு ரூ.2000 கடலை கொடிகளை தோட்டத்தில் ஏற்றி வீடுகளில் இறக்குவதற்கும் அதனை ஏற்றி வர குறைந்தபட்சம் நான்கு ஆட்களுக்கு ரூ.3,600 செலவு ஆகிறது என்று கூறுகிறார்கள். மாட்டுக்கு வைக்கோல், கடலை கொடி விலை கூடுதலாக உள்ளது. மேலும் மாட்டிற்கான தரமான தவுடு கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.40க்கு விற்பனை ஆகிறது என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கும் நிலையில் வெயில் காலத்தில் பால் கறவை குறைந்துள்ளது.

தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை கந்தர்வகோட்டை நகரில் கொண்டுவர வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்கள். கந்தர்வகோட்டை நகரில் பால் கொள்முதல் நிலையம் அமைத்தால் நகரத்தில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், சுற்றுப்புற கிராமங்களில் வளர்ப்பவர்களுக்கும் சுலபமாக இருக்கும் என தெரிவித்தனர்.

Advertisement

Related News