தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தா.பழூர் அருகே கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் வெள்ள அபாய எச்சரிக்கை

தா.பழூர், ஆக. 1: தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளில் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக கொட்டித் தீர்ப்பதால் கர்நாடகவின் கே. ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளிலிருந்து உபரி நீர் அதிகளவில் வௌியேற்றப்படுவதால், மேட்டூர் அணை நிரம்பி, முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டி, மேட்டூர் அணையிலிருந்த பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் எந்த நேரமும் வெள்ளம் வரலாம் என்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, மாடுகளை குளிப்பாட்டவோ, துணி துவைக்கவோ காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்குச் செல்ல வேண்டாம் என திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் கிராமங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில், தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளான தென்கச்சிபெருமாள் நத்தம், கீழக்குடிகாடு, மேலகுடிகாடு, அடிக்காமலை, அண்ணங்காரன் பேட்டை, கோடாலி கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் சசிகுமார், சுகாதார ஊக்குநர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம், உதவியாளர் ஜான்சிராணி ஆகியோர் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

Related News