தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

 

Advertisement

ஈரோடு, ஜூலை 31: காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்ட தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியதால், அணையில் இருந்து உபரிநீர் 23 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், காவிரி கரையோரம் உள்ள அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணி மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், காவிரியில் வெள்ள அபாய அச்சம் நீங்கும் வரை அத்தியாவசியத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுமுறை எடுக்க கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அனைவரும் உஷாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News