தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளத்தால் பாதிக்காத வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி பைவலசா ஏரிக்கரை சீரமைப்பு

Advertisement

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே வெள்ளத்தால் பாதிக்காத வகையில் பைவலசா ஏரிக்கரை மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சீரமைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனால், இங்குள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பைவலசா ஏரியிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக ஏரி நிரம்பி கரையில் லேசான கசிவுநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. ஊரகத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் கிராமத்திற்குள் போகும் அபாயம் இருப்பதால், கரை உடைந்து பெரும் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனையடுத்து ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.கலைச்செல்வி முன்னிலையில், ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு தண்ணீர் வெளியேறாத வகையில் அடைத்தனர். உதவி பொறியாளர் சக்திவேல், பணி மேற்பார்வை பார்வையாளர் சக்கரவர்த்தி, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News