தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை தீவிரம்

 

Advertisement

கோபி, மே 28: கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பருவமழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்து உள்ளது. அதே போன்று பவானிசாகர் அணைக்கு நீர் வரத்தும் அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. பவானி ஆற்றங்கரையிலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை கோபி பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் மாநில சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகள் மொத்தம் 201 கி.மீ சாலை உள்ளது. இந்த சாலைகளில் வெள்ளபாதிப்புகளை எதிர்கொண்டு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மணல் மூட்டைகள், காற்றில் கீழே விழும் மரங்களை அகற்ற அறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி இயந்திரங்கள், கோபி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் மோகன்ராஜ், உதவிப்பொறியாளர் விஜய் கிருஷ்ணா தலைமையில் முன் களப்பணியாளர்களான 4 சாலை ஆய்வாளர்கள், 36 சாலைப்பணியாளர்கள் 36 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்களில் உள்ள அடைப்புகள், புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.மேலும், அதிக மழையினால் ஏற்படும் மண் அரிப்பு, மண் சரிவு, சாலை துண்டிப்புகளை உடனடியாக சரிசெய்து போக்குவரத்திற்கு தடைகள் ஏற்படாமல் இருக்க போதிய முனனேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

Advertisement