தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் கடத்திய 5 பேர் சுற்றி வளைப்பு

போரூர், ஜூன் 18: திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள் யானை தந்தத்தை பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் சுப்பையா, வனசரகர் அருள்நாதன் மற்றும் வனவர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் யானை தந்தம் இருப்பது தெரிய வந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் (39), முத்துக்குமார் (44), சாகிம் அகமது (31), குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அபிஜில்லா (55), வேலூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து வன அலுவலர் சுப்பையா 5 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement