தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைபர் படகுகள் கடலுக்கு செல்லாததால் ₹10லட்சம் மீன்பிடி வர்த்தகம் பாதிப்பு

வேதாரண்யம், மே 25: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகுகள் ஒரு வாரமாக கடலுக்கு செல்லாததால் ரூ.10 லட்சம் மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றமாக காணப்படுகிறது இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக நாகையில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 மீனவர்கள் நேற்று 7வது நாளாக மீன் பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத நிலையில் குறைந்த தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகுகள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க ஏழு நாட்களாக செல்லவில்லை. இதனால் ஃபைபர் படத்தின் மீனவர்களின் மீன்வர்த்தகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் பத்து லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர். சில மீனவர்கள் தங்கள் படகுகளின் வலைகளை சரி பார்க்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement

Related News