தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை மீன்கள் விலை குறைவு: வஞ்சிரம் கிலோ ரூ.500க்கு விற்பனை

Advertisement

திருவொற்றியூர்: கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை என்பதால் காசிமேட்டில் நேற்று மீன் விலை குறைந்தது. மேலும் மீன்பிரியர்கள் வரத்தும் மிகவும் குறைந்தது. வஞ்சிரம் ஒரு கிலோ 500க்கு விற்பனை செய்யப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புயல் மழைக்கு பின்பு ஏராளமான விசைப்படகுகளுடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள், நேற்று கரைக்கு திரும்பினர். பெரிய வகை மற்றும் சிறிய வகை இறால், மீன்கள் ஏராளமானவை மீனவர்களுக்கு கிடைத்தது. மீன் ஏலம் இடத்தில் வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் மிகக் குறைந்த அளவே வந்திருந்ததால் விசைப்படகு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களிடம் இருந்த மீன்களில் ஒரு பகுதியை மட்டும் ஏலத்தில் விட்டு விட்டு மற்ற பகுதியை படகுகளிலிருந்து இறக்காமல் வைத்திருந்தனர்.

சில்லரை விலையிலும் மீன் விலை மிக குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. சிறிய வகை இறால் ரூ.60லிருந்து ரூ.150 வரை விற்கப்பட்டது. வஞ்சரம் ஒரு கிலோ ரூ.500க்கும், சிறிய ரக மீன்கள் மிகக் குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அங்கு வந்த மகிழ்ச்சியுடன் அதை வாங்கிச் சென்றனர். விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன் விலை சரியாக கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். அப்போதுதான் விசைப்படகுகள் அதிகம் வரும். ஆனால் புயலுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் நேற்று வந்தது. ஆனாலும், விலை குறைவாக மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

Advertisement

Related News