தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தமபாளையம் பகுதியில் முதல் போக நெல் நடவு ஜரூர்: ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகளுக்கு சிரமம்

 

Advertisement

உத்தமபாளையம், ஜூலை 12: உத்தமபாளையம் பகுதியில் முதல்போக நெல்நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முதல்போக நெல் நடவு பணிக்காக, தற்போது முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெரியாறு பாசன கால்வாயிலிருந்து தற்போது 16 கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், உத்தமபாளையம், கோவிந்தன்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி, அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாசன நீர் கிடைத்து, மகிழ்ச்சியுடன் விவசாயிகள் நடவுப் பணிகளை தொடங்கி விறுவிறுப்பாக பணிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், போதுமான ஆட்கள் கிடைக்காததால் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், இந்தாண்டு பெரியாறு அணையின் நீர்மட்டம், குறையாத நிலையில், முதல் போக நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது’’ என்றனர்.

Advertisement

Related News