தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தொழிலாளி கொலை வழக்கில் பட்டாசு ஆலை வாட்ச்மேன் கைது

விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான அழகு மலையான் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் முத்துலாபுரத்தை சேர்ந்த பழனிமுருகன்(52) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பழனி முருகனுக்கு இரு மனைவிகள், 3 குழந்தைகள் உள்ளனர். பழனிமுருகன் ஆலையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் கடந்த 20ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.

மறுநாள் காலை வேலைக்கு வந்தவர்கள் பழனிமுருகன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி தலைமறைவாக இருந்து பட்டாசு ஆலை வாட்ச்மேன் நந்தீஸ்வரனை(60) தேடி வந்தனர். ஓ.கோவில்பட்டியில் பதுங்கி இருந்த நந்தீஸ்வரனை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில், பட்டாசு ஆலையில் பழனிமுருகன் வாட்ச்மேன் மற்றும் தொழிலாளியாக ஆலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

புதிய வாட்ச்மேனாக நந்தீஸ்வரன் (60) வரவால், பழனிமுருகனுக்கு சம்பளம் குறைந்துள்ளது. இதனால் இருவரிடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் 20ம் தேதி இரவு மதுபோதையில் வந்த பழனிமுருகனிடம், நந்தீஸ்வரன், தனக்கு மதுவாங்கி வரவில்லையா என கேட்டதால் அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் நந்தீஸ்வரன் இரும்பு கம்பியால் பழனிமுருகனை தாக்கி கொலை செய்துள்ளார் என தெரிவித்தனர்.