தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரையில் தீ தடுப்பு உலோக ஷீட்

 

Advertisement

நாகர்கோவில், ஜூன் 3: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது மேலும் 2 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இது தவிர நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகளும் நடக்கிறது. இதன் ஒரு கட்டமாக பிளாட்பாரங்களில் உள்ள மேற்கூரைகள் சீரமைக்கப்படுகிறது. பிளாட்பார மேற்கூரையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர மாற்று திறனாளிகள் நடந்து செல்லும் வகையில் தனியாக அதற்கான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் பிளாட்பாரத்தில் கிரானைட் பதிக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளின் ஒரு கட்டமாக பிளாட்பார மேற்கூரையில், தீ தடுப்புக்கான அலுமினிய உலோக கலவை பொருந்திய 3 டி வடிமைப்புகளுடன் கூடிய மேற்கூரை பதிக்கப்படுகிறது. இது கூலிங் தன்மையும் கொண்டதாகும்.

அதிக வெப்ப நிலையை சமாளிக்கும் வகையில் செயல்படுவதுடன், மழை காலங்களில் நீர் கசிவையும் தடுக்கும் என அதிகாரிகள் கூறினர். பிளாட்பார மேற்கூரையில் மின் ஒயர்கள் செல்கின்றன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால், கூட உலோக கலவை மூலம் தீ பரவலை தடுக்க முடியும். இதன் காரணமாக பிளாட்பார மேற்கூரைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். இந்த மேற்கூரைகள் பச்சை, வெள்ளை வண்ணத்தில் பதிக்கப்படுகிறது.

Advertisement

Related News