தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாசுதேவநல்லூர் அருகே தொழுவத்தில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் கருகின

 

சிவகிரி, ஜூலை 14: வாசுதேவநல்லூர் அருகே தொழுவத்தில் தீ பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி இறந்தன. மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையணையில் மாரியப்பன் மகன் பிள்ளையார்(63) வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தொழுவம் அமைத்து அதில் ஆடு, கோழி, நாய்கள் வளர்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு ஆட்டுத் தொழுவத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் பயங்கர காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதில் தொழுவத்தில் இருந்த 12 ஆடுகள், 20 கோழிகள், ஒரு நாய் ஆகியவை தீயில் கருகி இறந்தன.

பிள்ளையாரிடம் செல்போன் இல்லாததால் தீப்பிடித்தவுடன் தீயணைப்புத் துறையினருக்கோ, மற்றவர்களுக்கோ தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதனால் அவரே தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related News