தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் தீ விபத்து: சமூகவிரோதிகள் காரணமா? போலீசார் விசாரணை

கும்பகோணம், ஏப்.28: கும்பகோணம் அருகே கீழக்கொருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி மர்ம நபர்கள் வைத்த தீயால் வகுப்பறை எரிந்து சேதமானது. கும்பகோணம் அருகே கீழக்கொருக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி 1937ல் கட்டப்பட்ட பழமையான வகுப்பறைகள் கொண்டதாகும். இது வாய்க்கால் ஓரமாக இருப்பதால் மழைக்காலங்களில் பல்வேறு விஷ ஜந்துக்கள் நடமாடும் என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடனே இருந்து வந்ததாக தெரிகிறது. அதோடு பாதுகாப்பில்லாத பள்ளியின் வகுப்பறைக்கு பின்புறத்தை சிலர் மது அருந்தும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

Advertisement

மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போடுவதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் நடமாட்டம் இல்லாத போது முழு நேரமும் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென்று பள்ளி வகுப்பறை, தலைமையாசிரியர் அறை தீப்பற்றி எரிந்தது.

அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் வகுப்பறையில் இருந்த உள்ள பர்னிச்சர்கள், மாணவர்கள் அமரும் டெஸ்க், பெஞ்ச் மற்றும் ஆய்வக உபகரணங்கள், அங்குள்ள ஆவணங்கள் மாணவிகளுக்கான நாப்கின்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. சமூகவிரோதிகள் பள்ளி கட்டிடத்தின் சுற்றுப்புறத்தில் மது அருந்தி, புகைபிடிப்பதால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மிகவும் பழமையான இந்த பள்ளிக்கு பாதுகாப்பான பள்ளி கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீமை செய்யும் பூச்சிகளை சிலந்திகளை கொண்டு கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்போம். செலவினை குறைத்து நிறைவான மகசூலை பெறுவோம்!

Advertisement

Related News