தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈவெரா சாலையில் குடும்பத்துடன் எஸ்ஐ சென்ற காரில் தீவிபத்து

 

Advertisement

சென்னை, மே 31: வேப்பேரி ஈவெரா சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த வேப்பேரி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார். புரசைவாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகேஸ்வரன் (50). இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை தனது மாமியார், மாமனாரை எழும்பூர் ரயில் நிலையத்தில் விடுவதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் காரை ஓட்டி சென்றார். வேப்பேரி ஈவெரா சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்றபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த மகேஸ்வரன் உடனே காரை நிறுத்தி, மாமனார், மாமியாரை வேகமாக கீழே இறக்கினர். சிறிது நேரத்திற்குள் கார் மளமளவென முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இன்றி உயிர்தப்பினர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுமையாக எரிந்து எலும்புக்கூடானது. இந்த விபத்து குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ேவப்பேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement