தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ

 

Advertisement

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் புறவழிச்சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்ட வளம் மீட்பு பூங்கா உள்ளது. இதையொட்டி, குப்பை கிடங்கு உள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு, பின்னர் அவற்றில் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகின்றன.

இப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கிடங்கில் இருந்த குப்பை முழுவதும் பரவியது. இதன் காரணமாக 100 அடி உயரத்திற்கு புகை மூட்டம் ஏற்பட்டு, ஓஎம்ஆர் புறவழிச்சாலை முழுவதும் மறைத்துக்கொண்டது.

இதையடுத்து, புறவழிச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பழைய சாலையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சிறுசேரி மற்றும் திருப்போரூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 வாகனங்கள் வந்து சிறுசேரி தீயணைப்பு அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

Advertisement

Related News