தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முசிறி அருகே நானல் குத்து தீப்பற்றி எரிந்து ரூ.50,000 மின்சாதனங்கள் சேதம்

 

தொட்டியம், ஜூலை 11: முசிறி அருகே நான்குத்து தீப்பற்றி எரிந்ததில் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் உள்ள ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் வயர், குழாய்கள் சேதமானது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுபுத்தூர் பகுதியில் உள்ள ஆலம்பாளையம் புதூரில் விவசாயி சக்திவேல், குப்புசாமி ஆகியோருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை செய்த நிலையில், தோட்டத்தில் நானல் மற்றும் புதர்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது.

மர்ம நபர்கள் இந்த நானல் புதருக்கு தீ வைத்ததால், காற்றின் வேகத்தில் மளமளவென தீப்பற்றி நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள மின்வயர் மற்றும் குழாய்கள் அனைத்தும் எரிந்தது. தீயில் மின்வயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது, காற்றில் அதிக அளவு தீ பரவி விடும் என அச்சத்தில் இருந்தனர், தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related News