தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

 

Advertisement

ஈரோடு, மார்ச் 13: ஈரோடு, வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஈரோடு மாநகராட்சி, 60வது வார்டுக்கு உள்பட்ட வெண்டிப்பாளையம் குப்பைக்கிடங்கில், நேற்று முன்தினம் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த பயங்கர தீயால் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவிலான கரும்புகை வெளியேறியது.

இதன் காரணமாக, வெண்டிபாளையம், மரப்பாலம், இந்திராநகர், கருங்கல்பாளையம் பகுதிவாழ் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்பட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. தீ குறித்த தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன், 3 சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 80க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாநகர நல அலுவலர் டாக்டர் பிரகாஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார், பொறியாளர்கள், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், வெண்டிப்பாளையம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘வெயிலின் தாக்கம் காரணமாகவே குப்பைகளில் தீ பற்றியது. மேலும், எதிர் வரும் கோடைக்காலத்தில் இதுபோல, வெயிலின் தாக்கத்தால் தீ விபத்து ஏற்படாதவாறு தவிர்ப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

Advertisement

Related News