தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடக்கோடு கிராமத்தில் உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

 

Advertisement

ஊட்டி, ஜூலை 22: கோத்தகிரி அருகே கடக்கோடு கிராமத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளின் செயல்பாடு மற்றும் மண் உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகள் மற்றும் E-Nam பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி கடக்கோடு கிராமத்தில் நடந்தது.

இப்பயிற்சிக்கு ஊர் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமார், E-Nam வலைதளத்தில் பதிவு செய்யும் முறைகள் மற்றும் ஒழங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்பாடு முறைகள் குறித்து விளக்கி பேசினார். முன்னோடி விவசாயி ராம்தாஸ், அங்கக இடுபொருட்களான மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். தோட்டக்கலை அலுவலர் ஐஸ்வர்யா, தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலா, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரவீணா, மாடி தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Advertisement

Related News