தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடி பகுதியில் தொடரும் சாரல் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்

போடி, மே, 22: போடி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த நான்கு நாட்களாக போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகள் நனைந்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement

தேனி மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில் போடி பகுதியில் கனமழை இல்லாமல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. இதனால் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சில சமயங்களில் சிறிது நேரத்திற்கு மட்டும் கனமழை பெய்தது. பின்னர் சாரல் மழை விட்டு விட்டு தொடர்ந்தது.

தொடர் சாரல் மழையால் சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் சிரமமடைந்த போதும் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர் அதிகளவு ஊற்றெடுக்க வழி கிடைத்திருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் பயிர் சாகுபடிக்கு பாசனம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

Related News