தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சூலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

சூலூர்,டிச.7: ரேஷன் கடைகளில் தற்போது விற்பனை செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 100 நாட்கள் 100 ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர். நேற்று 50-வது நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணிக்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் அருகே அந்த சங்கத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அனைத்து விவசாயிகளும் இணைந்து சூலூர் வட்டாட்சியர் தனசேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் கருதி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிறப்பு விருந்தினராக சூலூர் எம்எல்ஏ கந்தசாமி கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

Advertisement