தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேப்பனஹள்ளி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை

வேப்பனஹள்ளி, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். தற்போதைய பட்டத்தில் மழை பெய்து, நிலக்கடலை விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு பருவமழை தற்போது வரை பெய்யாததால், நிலக்கடலை விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சீசன் தொடக்கத்தில் பெய்த மழையில், தற்போது வரை 20 சதவீதம் மட்டுமே நிலக்கடலை விதைக்கப்பட்டுள்ளது. இதுவும் போதிய மழை இல்லாததால் பயிர்கள் முளைக்காமல் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்வது தாமதமானால் விதைக்கப்பட்டுள்ள 20 சதவீதம் பயிர்களும் அழியும் அபாயம் உள்ளது. எனவே, பருவமழை பொய்த்தால் இம்முறை நிலக்கடலை பயிரிடும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு, நிலக்கடலை உற்பத்தி வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Related News