தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதம மந்திரி கவுரவ நிதிபெற விவசாயிகள் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், மே 20: பிரதம மந்திரியின் கவுரவ நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் இந்திய அஞ்சல் கட்டண வங்கியினையும் அணுகி இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.இத்திட்டத்தின்கீழ் 20-வது தவனை நிதி வருகிற ஜீன் மாதம் விடுவிக்கப்பட உள்ள நிலையில் தகுதியுடைய விவசாயிகள் வேளாண்மைதுறை அலுவலர்களை தொடர்புகொண்டு தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பது, நில உடைமைகளை பதிவேற்றம் செய்து கொள்வது மற்றும் அனைத்து விதமான பி.எம்.கிசான் தொடர்பான விவரங்களை சரிசெய்து பயன்பெறலாம்.

Advertisement

இத்திட்டத்தில் இதுவரை சேர்ந்து பயனடையாத விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளும் ஏற்கனவே பதிவு செய்து பயன்பெற்று பல்வேறு காரணங்களால் தற்போது நிதி உதவி நிறுத்தப்பட்ட பயனாளிகளுக்கும் இந்த முகாமிற்கு வந்து பயனடையலாம். மேலும், இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே பயன்பெற்று வந்த விவசாயி மரணமடைந்திருந்தால், அவர்களது தகுதியுடைய வாரிசு உரிய ஆவணங்களை சமர்பித்து, தங்களது பெயருக்கு இத்திட்டத்தில் புதியதாக பதிவு செய்து பயனடையலாம். இறந்த பயனாளிகளின் விவரங்களை சமர்ப்பிக்காமல், இறந்த பிறகும் தொடர்ந்து தவணைத்தொகை பெறப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வரும் பட்சத்தில் தவறுதலாக பெறப்பட்டத்தொகை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

எனவே, இறந்த பயனாளியின் இறப்பு சான்றினை சமர்பித்து, அவர் பெற்று வரும் நிதியினை நிறுத்தவும், உரிய ஆவணங்களை சமர்பித்து வாரிசுதாரர் புதிதாக பதிவுசெய்து இத்திட்டத்தில் பயனடையவும் அறிவுறுத்தப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமையை பதிவு செய்தால் தான் ஜீன் மாதம் வழங்கப்படவுள்ள 20-வது தவணை நிதி பெற இயலும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை நில உடமைப்பதிவு செய்யாத பி.எம்.கிசான் 15179 பயனாளிகளும் இந்த முகாமில் கலந்துக்கொண்டு பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. பி.எம்.கிசான் தொடர்பான அனைத்து மனுக்களுக்கும் இந்த முகாமில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் பயனடைய வழிவகை செய்யப்படும் என்பதால் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News