தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளிப்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

ஈரோடு, ஜூலை 10: பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவது ஆலோசனை கூட்டம் நடந்தது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவது தொடர்பா கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் கட்டிடம் கட்டுவது, தற்போது 100 மருத்துவ மாணவ-மாணவிகள் சேர்க்கையாக உள்ள இளநிலை மருத்துவ இடங்களை 150 ஆக உயர்த்துவது, 150 மாணவர் சேர்க்கைகான பற்றாக்குறையாக உள்ள பயிற்றுவிப்பு பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள், கூடுதல் இயந்திரங்கள் வாங்குவது பற்றியும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

மேலும், ரூ.34 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணியினை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சீமாங் (மகளிர் மற்றும் மகப்பேறு, பச்சிளங்குழந்தைகள்) கட்டிடத்தின் விரிவாக்க பணி, கல்லூரியில் உள்ள மாணவர்கள் பயிற்றுவிப்பு அறை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மருத்துவமனையில் நடக்கும் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செந்தில்குமார், துணை முதல்வர் டாக்டர் மோகனசௌந்திரம், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில் செங்கோடன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News