தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 26: தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம்-கொச்சி நெடுஞ்சாலை துறை சார்பில் கோவையை அடுத்த கணியூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வாகனம் செல்லும் வழித்தடத்தில், சுங்க கட்டணம் வசூல் செய்வது இல்லை. ஆனால், தற்போது சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். இதுபற்றி தங்களிடம் கடந்த 6.5.2024 மற்றும் 24.5.2024 ஆகிய தேதிகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்றுவரை அதே நிலை தொடர்கிறது. எனவே, இந்த வழித்தடத்தில் சுங்க கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

Advertisement

இதேபோல், கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்காக மதுக்கரை, தொண்டாமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, உட்பிரிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறை மூலம் கிரயம் செய்து, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உட்பிரிவு செய்து, கணினி மூலம் நிலம் பதிவேற்றம் செய்து வழங்கப்படவில்லை. இப்பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதேபோல், இப்புறவழிச்சாலை திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement

Related News