தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

தர்மபுரி, ஜூலை 3:பாலக்கோடு, குண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தன் (41). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மதியம், பாலக்கோடு காவல் நிலையத்துக்கு மனு கொடுப்பதை போல, கையில் ஒரு ‘கட்டை’ பையுடன் வந்துள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், பையில் இருந்து பெட்ரோல் கேனை எடுத்து, தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

அதை தொடர்ந்து அவர் பெட்ரோல் கேனுடன் வந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தியதில், தனது அண்ணன் வடிவேல், தனது நிலத்தில் இருந்த பைப்பை உடைத்துள்ளார். நிலத்தகராறு குறித்து அவர் மீது, கடந்த 10 மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தனை போலீசார் கைது செய்தனர்.

Related News