தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

 

Advertisement

திருச்சுழி, மே 31: திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது விவசாயியை தாக்கி மண்டை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உக்கிரபாண்டி(50) என்பவரை அதே ஊரை சேர்ந்த பாண்டி, முக்கூர் மருதுபாண்டி, பஞ்சவர்ணம், அம்மன்பட்டி மங்கடா மருது ஆகியோர் பயங்கர ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் உக்கிரபாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் வந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உக்கிரபாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து உக்கிரபாண்டி கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறினோம். அதையும் மீறி அனுமதி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஏற்கனவே அரசியல் முன்விரோதம் காரணமாக அம்மன்பட்டியை சேர்ந்தவர்கள் என்னை ஆயுதத்தால் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News